Tuesday 21 May 2013

மண்ணை உணருதல்

கோடை முடிகிறது, பள்ளி திறக்கும், குழந்தைகள் தயங்கித்தயங்கி  வெட்ட கொண்டு செல்லப்படும் ஆடு  போல் மாலை போல் பேக் மாட்டிக்கொண்டு சீவி சிங்காரிச்சு இழுத்து செல்லப்படுவார்கள்.

உங்களில் கீழ்க்கண்டவர்கள் இருக்கிறீர்களா சில கேள்விகள் ..

1. எனக்கு மரங்கள்/ விலங்குகள் என்றால் ரொம்ப ஆர்வம் அதிக தடவை தடவை வாலன்டியர்  புரோகிராமில் கலந்து கொண்டு மரம் நாட்டிருக்கேன் எதிர்காலத்தில் விவசாயம் செய்யணும்கறது என் கனவு
2. என்னால் சமூக சேவையெல்லாம் செய்ய முடியாது நான் ஆபிஸ்ல அவுட் ரீச் பிரோக்ரம்ல அப்பப்ப பள்ளிகளுக்கு அனாதை ஆசிரமங்களுக்கு உதவ செல்வேன்
3. நான் உண்டு என் வேலை உண்டு அதை சரியா செய்வதே சமூகத்திற்கு நான் செய்யும் நன்மை.

எப்பவாது யோசிச்சீங்களா நீங்க எவ்வளவு படிச்சிருந்தாலும் கூலி வேலை தான் செய்யறீங்கண்ணு?
நீங்கள் காலையில் அடிச்சி புடிச்சு ஆபீஸ் போயி வேலைக்கு முன்னாடி மூஞ்சி கழுவரது தான் மொதல்ல செய்ரவேலை, ஏன்னா டிராபிக் புழுதி கசகசப்பு..வெய்யில்.

வெள்ளைக்காரன் ஒரு காலத்தில சொன்னாண்கிறதுக்காக மிசினாறி காண்வெண்ட்.கள் ஆரம்பித்து வைத்தது இது. இன்னும்   பிஞ்சு குழந்தைகளை  காலில் உறைய மாட்டி ரத்தத்தை உறைய வைக்கும் சூ மாட்டி அனுப்புறீங்களே இது சரியா? ஒரு தடவையாச்சும் பள்ளி கூடத்தில கேட்டீங்களா  ஏன் இப்படி 40 டிகிரி வெயிலில் இப்படி மாட்டி வரணும்னு ? ஏன் அவங்க டிராபிக்லா போகலையா அவங்களுக்கு ஏ சி ஸ்கூல்ஆ ? அவங்களுக்கு கச கசப்பு வராதா ? காலில் அரிக்காதா ? ஏன் பள்ளி கூடத்தில் எப்போதும் விளையாட்டு பீர்யடு மட்டும் தான் மொத்த நாளுக்குமா ? சூ மாட்டி தோம் தொம்நு குதிப்பாங்களா ? எல்லாருக்கும் மாட்டு தோலில்  சூ செய்யணும்னா எத்தனை மாடு வெட்ட பட்டிருக்கும்?



வெள்ளைக்காரனுக்கு அவன் ஊரில் பெரும்பாலும்  பனி மட்டும் தான் இருக்கும்; நமக்கு புத்தி எங்க போவூது ?
அவன் இந்த ஊருக்கு வந்தாண்ணா கவனிச்சிருக்கலாம் காட்டன் ஷர்ட்டும் டவுசரும் மாட்டிக்கிட்டு தான் சுத்துவான்.  நாம குழாய் மாட்டிக்கிட்டு சொறிஞ்சிக்கிட்டு இருப்போம் நல்ல வெயிலிலும்.